Wednesday, April 15, 2009

தேர்தல் களத்தில் அசத்தும் அசாருதீன்


இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் முஹம்மது அசாருதீன், காங்கிரஸ் கட்சியின் சார்பாக உத்தரப்பிரதேசத்தில் போட்டியிடுகிறார். ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்த முஹம்மது அசாருதீன் ஹைதராபாத் தொகுதியில் அல்லது செகந்தராபாத் தொகுதியில் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அசாருதீன் எங்கள் மாநிலத்தில்தான் போட்டியிட வேண்டும் என பல்வேறு முனைகளிலிருந்தும் கோரிக்கைகள் வந்தன.

ராஜஸ்தான் மாநிலத்தில் போட்டியிட வேண்டும் என்றும் அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் விருப்பம் தெரிவித்தனர். இறுதியில் மாயாவதிலிமுலாயம் அதிரடி கோட்டையான உத்தரப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் கணிசமாக வாழும் மொராதாபாத்தில் அசார் களம் காண்கிறார்.

நான் உங்களுடனே எப்போதும் இருப்பேன் என்ற பொருளில் மிக நீண்ட இன்னிங்ஸில் இங்கு விளையாடுவேன் எனக் கூறியுள்ளார். நான் இப்போதே வெற்றி பெற்றுவிட்டதைப் போல் இருக்கிறது என பொதுமக்கள் கூறுகிறார்கள். ஆனால் நான் அவ்வாறு நினைக்கவில்லை. வெற்றி என்பது விளையாட்டில் கடைசி பந்து வீசப்பட்டு முடியும்வரை முடிவு தெரியாது என முஹம்மது அசாருதீன் தெரிவித்திருக்கிறார்.

46 வயதான முஹம்மது அசாருதீன் கிரிக்கெட் உலகின் நட்சத்திரமாகவே வலம் வந்தவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. அவர் கிரிக்கெட் உலக பிரபலம். அது இவருக்கும் இவரது காங்கிரஸ் கட்சிக்கும் நன்றாகவே 'கை' கொடுக்கும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்கள்.

17 லட்சம் மக்களைக் கொண்ட மொராதாபாத் லி தாமிரம், அலுமினியம், இரும்பு மற்றும் கண்ணாடி தொழில்களுக்கு பிரசித்திப் பெற்றது. இத்தொகுதியில் கரும்பு விவசாயிகள் கணிசமாக வாழ்கின்றனர். உத்தரப்பிரதேசத்தைப் பொறுத்தவரையில் காங்கிரஸ் ஒரு செல்வாக்கு குறைந்த கட்சியாகவே காட்சியளிக் கிறது. ஆனால் சோனியா, ராகுல், அசாருதீன் என அக்கட்சியின் பிரபலங்கள் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் போட்டியிடுகின்றனர் என்பது ஒரு விநோதமான உண்மையாகும்.