Friday, April 3, 2009

கூலிக்கு வேலை செய்யும் முன்னாள் எம்.எல்.ஏ



கோடிக்கணக்கில் பணம் கொடுத்து சீட் வாங்குவது, பின்னர் கோடிக்கணக்கில் செலவழித்து தேர்தலில் ஜெயிப்பது என்று சட்டமன்றமும் நாடாளுமன்றமும் பணக்காரர்கள் மிதிக்கும் படிக்கட்டுளாக மாறிவிட்டன. ஆனால் 35 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் பிரதிநிதியாக இருந்த சுக்கா பகதாலு தன் கணவருடன் சேர்ந்து தினமும் 60 ரூபாய் என கூலிக்கு வேலை செய்கிறார் என்றால் நம்பமுடிகிறதா?


சுக்கா பகதாலு ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர் இப்போது அவருக்கு வயது 64. 1972 ஆம் ஆண்டு ஆந்திர மாநிலம் பாட்டபட்ணம் தனித் தொகுதியில் இருந்து ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 27. 1977ஆம் ஆண்டு தேர்தலில் அத்தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் சுக்கா ரானார் 1967 மற்றும் 1972லிகளில் மட்டும் தனித் தொகுதி யாக இருந்த பின்னர் 1977 சட்டமன்றத் தேர்தலில் பாட்ட பட்ணம் பொதுத் தொகுதியாக மாற்றப்பட்டது. தலித் பெண்ணான சுக்காவுக்கு அங்கு போட்டியிட முடிய வில்லை. எனவே, ஸ்ரீகாகுலத்தில் பால கொண்டற தொகுதி யில் 1978ல் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டார். ஆனால் 1977ல் காங்கிரஸ் ஆட்சியின் அவசர நிலை கால சட்டத்தினால் மக்கள் நொந்து போயிருந்ததால் 1978 தேர்தலில் சுக்கா தோற்க நேர்ந்தது. தற்போது முன்னாள் எம்.எல்.ஏக்களுக்கான ஓய்வூதியம் பெற்றுவருகிறார்.


சுக்காவுக்கு மூன்றும் பெண் குழந்தைகள். மிகப்பெரிய கடன் சுமையில் விழுந்த சுக்கா கணவருடன் தினக் கூலிக்கு வேலை செய்து வருகிறார். தற்போது ஆந்திரப் பிரதேசம் வடக்கு கடற்புறமான ஸ்ரீகாகுலத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான முக்தாபுரத்தில் நிலம் தோண்டி மண்ணை வெளியேற்றும் பணி செய்து வருகிறார், 64 வயதிலும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறார்.


தற்போது கூறை வேயப்பட்ட வீடு ஒன்றில் வாழ்ந்து வருகிறார் சுக்கா. மழை வந்தால் வீடு ஒழுகும். இருப்பி னும் தற்போதும் சுக்கா, காங்கிரசுக்கு விசுவாசமாகவே இருந்து வருகிறார்.


1972ல் ஆந்திர சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உறுப்பினர்களில் நானும் ஒருத்தி எனக் கூறும் சுக்கா, இந்திரா காந்தியை தனது முன்மாதிரி என்று குறிப்பிடுகிறார். தலைவர்கள் சுயநலமில்லாதவர்களாக இருக்க வேண்டும் என்கிறார். தற்கால அரசியல்வாதிகள் பணத்தை பின்புலமாக கொண்டுள்ளார்கள் என்கிறார் சுக்கா.


தற்போது பாட்டபட்டணம் தொகுதியின் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான சத்ருசார்லா விஜயராமராஜு, வனத்துறை அமைச்சராக உள்ளார். சமீபபத்தில் தனது கிராமத்துக்கு வந்த அமைச்சரிடம் தனது ஒழுகும் வீட்டை காட்டியுள் ளார் சுக்கா. வீட்டை சீரமைக்க உதவுவதாக அமைச்சர் கூறி சென்ற போதிலும் இதுவரை அமைச்சரும் திரும்பி வந்ததில்லை வீட்டை சரி செய்யவும் உதவவில்லை என்கிறார் சுக்கா.

நன்றி: www.tmmk.in

மனிதநேய மக்கள் கட்சியின் ஒற்றை காலில் நிற்கும் போராட்டம்



தென்காசி 9 வது வார்டில் எந்த வித அடிப்படை வசதிகளும் இல்லாது இருப்பதால் அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி மனித நேய மக்கள் கட்சியினர் தென்காசி முனிசிபாலிட்டி முன்னால் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நன்றி http://www.tmpolitics.net/

Thursday, April 2, 2009

மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி?




இன்று தமிழக மக்களின் பில்­யன் டாலர் கேள்வியாக இருப்பது மனிதநேய மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைப்பார்கள் என்பதே. கட்சி ஆரம்பித்து சரியாக ஐம்பது நாட்களே நிறைவடைந்த வேலையில் இத்தகைய கேள்வியலைகளை ஏற்படுத்தியுள்ளது.


வரும் சனிக்கிழமை (04.04.2009) அன்று மனிதநேய மக்கள் கட்சியின் செயற்குழு கூடி அது தனது நிலைபாட்டை அறிவிக்கவுள்ளது.


திமுக கூட்டணியில் இதுவரையிலும் இருந்து வந்த தமுமுக (தமிழ்நாடு முஸ்­லிம் முன்னேற்றக் கழகம்) மனிதநேய மக்கள் கட்சியை ஆரம்பித்த நாளி­ருந்தே ஒரு தொகுதியை ஏற்க மாட்டோம் என்றே சொல்­லி வந்துள்ளது. தற்போது திமுக கூட்டணியில் இருந்து முற்றிலும் வெளியே வந்து விட்டது என்றே எண்ணத் தோன்றுகிறது.


இனி மனிதநேய மக்கள் கட்சி என்ன செய்யும்?


முதலாவதாக வக்ஃபு வாரிய தலைவர் பதவியை ராஜினாமா செய்யும்?


முதலாவதாக, வக்ஃபு வாரியத்தில் இருந்து செ. ஹைதர் அ­லி ஆற்றிய பணிகளை நிச்சயம் பாராட்டியே தீர வேண்டும். வக்ஃபு வாரியம் போனால் என்ன? வக்ஃபு சொத்துக்களை மீட்பதை தமுமுகவால் திமுக கூட்டணியில் இருந்து தான் செய்ய வேண்டும் என்றில்லை வெளியில் இருந்தே செய்யலாம்.


இனி அதிமுகவுடன் மனிதநேய மக்கள் கட்சி கூட்டணி வைத்துக் கொள்ளுமா?


கூட்டணி குறித்து அதிமுகவும் மனிதநேய மக்கள் கட்சியுடன் பேசி வருவதாக பிபிசிக்கு தமுமுக தலைவர் அளித்துள்ள பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் அதிமுகவுடன் கூட்டணி வைப்பதால் தமுமுகவின் இமேஜ் ஏதேனும் சேதமடையுமா என்று தோன்றலாம். ஆனால் திமுகவை விட அதிமுகவில் அதிக இடம் கிடைக்குமானால் மனிதநேய மக்கள் கட்சி அங்கு செல்வதை யாரும் குறை சொல்ல முடியாது. ஏனெனில் திமுக, அதிமுகவின் தேர்தல் வெற்றி வாய்ப்பு என்பது தற்போதுள்ள சூழ்நிலையில் ஒரே மாதிரியாக தான் உள்ளது.


மனிதநேய மக்கள் கட்சி தனித்து நின்றால் என்ன?


என்றும் பரவலாக இன்று பேசப்பட்டு வருவதையும் நம்மால் உணர முடிகிறது. தனித்து நின்றால் சரியாக ஒரு தொகுதிக்கு குறைந்தது ஒரு கோடியாவது செலவிட வேண்டும். (திருமங்கலம் இடைத்தேர்த­ல் 100 கோடி ரூபாய் செலவிடப்பட்டதாம்) களப்பணியில் கை தேர்ந்த தமுமுகவினர் பன்மடங்கு உழைத்தால் விஜயக்காந்தை கூட பின்னுக்கு தள்ளிவிடலாம். தங்களின் பலத்தை அரசிற்கும் இதர தரப்பினருக்கும் உணர்த்திடலாம். இறுதியாக, அரசியலுக்கு குழந்தையான மனிதநேய மக்கள் கட்சி குழந்தை பருவத்திலேயே பிரபலமாகுமா அல்லது சிறிது காலம் ஆகுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்.


உங்களின் கருத்தினை இங்கே உள்ள கருத்துக் கணிப்பில் தெரிவித்து செல்லவும்