Sunday, April 26, 2009

மன்மோகன் சிங் மீது ஷு வீச்சு


 பிரதமர் மன்மோகன் சிங் மீது ஷு வீசிய வாலிபரை போலீசார் அப்புறப்படுத்தினர். லோக்சபா தேர்தலையொட்டி குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் நடந்த தேர்தல் பிரசார பொதுக் கூட்டத்தில் மன்மோகன் சிங் கலந்து கொண்டார். அப்போது மர்ம நபர் ஒருவர் பிரதமர் மீது ஷு வீசினார். அது மேடைக்கு முன்பாகவே சற்று தொலைவில் விழுந்தது. பின்னர் அந்த மர்ம நபரை போலீசார் அப்புறப்படுத்தினர். விசாரனையில் அவர் பொறியியல் கல்லூரி மாணவர் என்பது தெரியவந்தது. தலைவர்கள் மீது ஷு வீசுவது தொடர் கதையாகிறது.