Wednesday, May 13, 2009

திமுக கள்ள ஓட்டு - தமுமுகவினர் மீது அரிவாள் வெட்டு

திருவல்லிக்கேணி ஐஸ் அவுஸ் பகுதியில் கள்ள ஓட்டுப் போட்ட திமுகவினரை தடுக்க முயன்ற தமுமுகவினரை திமுக குண்டர்கள் கத்தி அருவாள்களுடன் தாக்குதல்கள் நடத்தியுள்ளனர். இதில் 10க்கும் மேற்பட்ட தமுமுகவினர் கடும் காயமடைந்திருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


உடனே சம்பவம் நிகழ்விடத்திலேயெ ஆயிரக்கணக்கான தமுமுகவினர் குவிந்து தாக்குதல் நடத்தியவர்களை தண்டிக்கக் கோரியும், மறுதேர்தல் நடத்த வேண்டும் எனக் கோரிக்கைகளுடன் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

காயமடைந்த ஜாகிர், மீராமைதீன், வசீம், சலாவுதீன், இபுறாகீம், மற்றும் சுதீர் ஆகியோர் கடுமையாக தாக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.


உடனே சேதி அறிந்து வந்த சென்னை மாநகர கமிஷ்ணர் ராதாகிருஷ்ணன் அளித்த வாக்குறுதியின் பெயரில் சாலை மறியலை தமுமுகவினர் கைவிட்டனர்.