இதில் பலவற்றில் மனிதப் புலக்கமே கிடையாது. இவைகள் பழுதடைந்தும், உடைந்து சின்னா பின்னமாகவும் காட்சி அளிக்கின்றது. கடந்த 1980ம் ஆண்டில் இருந்தே இங்குள்ள கட்டிடங்கள் அனைத்தும் முறையான பராமரிப்பின்றி உள்ளது.இந்த நிலையில் இந்த வீடுகளிலுள்ள கதவுகள் , ஜன்னல்கள் , கம்பி, மின்சாரவயர்கள், என பெரும்பாலான பொருட்களையம் சமூக விரோத கும்பல்கள் திருடிச் சென்றுவிட்டன. இந்நிலையில் காலியாக உள்ள தொகுப்பு வீடுகளில் பல சமூக விரோத செயல்கள் எந்த வித தடையும் இல்லாமல் அரங்கேறி வருகின்றது.
இம்முகாமில் ஒரே ஒரு அரசு மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களை பராமரிக்க 3 மருத்துவர்கள் இருந்த நிலைமை மாறி தற்போது வாரத்தில் 2 தினம் மட்டும் ஒரே ஒரு மருத்துவர் மட்டும் வந்து செல்கின்றார். அவரும் ஆண் மருத்துவர் . ஒரு மருத்துவர் மட்டுமே இங்கு வருவதால் நோயாளிகள் அதிக நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது. மேலும் அவர்களுக்கு சிறந்த மருத்துவமும் கிடைப்பது கெடையாது.
ஒரு காலத்தில் சிறந்த மருத்துவனையாக திகழ்ந்தது. ஆனால் இப்போழுது இதன் நிலையோ தலைகீழ். கடந்த ஐந்து ஆண்டுகளுக்குமேலாக இந்த மருத்துவமனையில் ஒரு பெண் டாக்டரே கூட வந்து சென்றதில்லை என்பதே ஆச்சரியமான உண்மை. பெண் மருத்துவர் இல்லாதக் காரணத்தினால் பெண் நோயாளிகள் இராமேஸ்வரம் அல்லது இராமநாதபுரத்திற்கு கொண்டு செல்ல வேண்டிய நிலமை. வாரத்திற்கு இரண்டு தினம் மட்டுமே மருத்துவர் இங்கு வருவதால் வரும் நோயாளிகளின் கூட்டத்தை சமாளிக்க முடியாமல் ஸ்டெதாஸ்கோப்பையே உபயோகிக்க முடியாத நிலையில் டாக்டர் அவசர கதியில் இயங்க வேண்டிய நிலைமை இங்கு நிலவுகிறது.
மேலும் டாக்டர் எழுதி கொடுக்கும் சீட்டுக்கு மருந்து கொடுக்கும் இடத்தில் இருக்கும் ஒரே ஒரு ஊழியரோ அந்த திரளான கூட்டத்தை சமாளிக்க முடியாமல் மாத்திரை மருந்துகளை வாரி வழங்க வேண்டியதுள்ளது.
இம்முகாமில் கழிப்பறைகள் பல இருந்தும் கூட ஒன்று கூட புதுப்பிக்கபடவில்லை. இதனால் இங்கு இருக்கும் ஒரு கழிப்பறையைக் கூட பயன் படுத்த முடியாத நிலையில் உள்ளது. ஏனேனில் கழிப்பறைகளின் கழிவுகள் நிறைந்து தெரு ஓரங்களில் வழிந்தோடுவதும் மற்றுமொரு காரணமாகும். இதனால் பல்வேறு தொற்று நோய்கள் பரவ ஏதுவாகின்றது. மேலும் பெண்களிலிருந்து குழந்தைகள் வரை பாதுகாப்பிள்ளாத இடங்களில் ஒதுங்க வேண்டிய அவலநிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
அசுத்த நீரை வெளியேற்றுவதற்கு இப்பகுதியில் கழிவுநீர் கால்வாய்களே இல்லை. இவற்றால் வீடுகளில் இருந்து வெளியேற்றப் படும் அசுத்த நீர் தெருக்களிலேயே தேங்கி நிற்கின்று. இதனால் கொசுக்கடியினாலும் பல்வேறு தொற்;று நோயினாலும் இங்குள்ள அகதிகள் பாதிக்கப் பட்டுள்ளனர்.இம்முகாமில் திடிர் திடிரென மின்தடை ஏற்படுவதினாலும், இப்பகுதிகளில் முறையான தெருவிளக்குகள் வசதிகள் செய்துத் தரப்படாதினாலும் இரவு நேரங்களில் அகதிகள் வெளியே வரவே நடமாடப் பயப்படுகின்றனர்.
இங்குள்ள தொடக்கப் பள்ளியில் 600க்கும் மேற்பட்ட அகதி மாணவ, மாணவிகள் பயிலுகின்றனர். இருப்பினும் அவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் ஆசிரியர்களின் எண்ணிக்கை இல்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது.
இத்தைகை கொடிய அவலங்களில் இருந்து இலங்கை அகதிகளை காக்க மத்திய, மாநில அரசுகளும் இலங்கை அரசும் ஒரு சேர்ந்து நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இவர்களின் அவலநிலைகளுக்கு தீர்வு காணஇயலும்.