Tuesday, June 9, 2009

வக்ஃபு வாரியத் தலைவராகிறார் கவிக்கோ அப்துல் ரகுமான்


தமிழ்நாடு வக்ஃபு வாரியத் தலைவர் பதவியை தமுமுக பொதுச் செயலாளர் செ. ஹைதர் அலி ராஜினாமா செய்த பிறகு அந்த பதவிக்குரிய இடம் தற்சமயம் காலியாகவே உள்ளது. இந்த நிலையில் நாடாளுமன்ற தேர்தலைச் சந்தித்த திமுக ஒரு சில முஸ்லிம் பிரமுகர்களுக்கு தேர்தலில் திமுகவிற்கு உங்களது விசுவாசத்தை காட்டுங்கள். பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதவி உங்களை தேடி வரும் என்றனர்.


காதர் முகையதீனுக்கு எம்.பி சீட் இல்லை என்ற நிலை உருவான பின்னர் வக்ஃபு வாரியத் தலைவர் பதிவியை அவருக்கே கொடுக்கலாம் என்று ஒரு தரப்பு நம்பி வந்த நிலையில்.....


கவிக்கோ அப்துல் ரஹ்மான் வக்ஃபு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டார். அநேகமாக இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்புகள் வரும் என எதிர்பார்க்கப் படுகிறது.
கவிஞராகவும் கலைஞரின் மிகச் சிறந்த ஜால்ராவாகவும் பெயர் எடுத்த கவிக்கோ அப்துல் ரகுமான் என்ன செய்யப் போகிறார் என்று பொறுத்திருந்து பார்க்போம்.