Friday, June 12, 2009

(இட்லி) வடையில் பிளேடு: பஞ்சாபிகாரரின் வாயை பதம் பார்த்தது.


பஞ்சாப் மாநிலத்தில் இருந்து தமிழகம் சுற்றுலா வந்திருக்கிறார் வினய்குமார் என்ற பஞ்ஞாபி. சென்ரல் ரயில்வே நிலையம் அருகே ஒரு கடையில் வடையை பார்சல் வாங்கி மனுசன் கொஞ்சம் லேட்டா சாப்பிட்டு இருக்கிறார். சாப்பிட்டு கொஞ்ச நேரத்தில் வாயில் இரத்தம் கொட்ட ஆரம்பித்திருக்கிறது. உடனே மனுசன் தலை தெறிக்க பக்கத்தில் இருந்த சென்ரல் அரசு மருத்துவமனைக்கு மருத்துவர்களிடம் காட்டியிருக்கிறார். பின்னர் தான்னுடைய வாயை மருத்துவரிடம் காட்ட பல்லிடுக்கில் பிளேடு துண்டு ஒன்றை கண்டு பிடித்திருக்கிறார்கள்.


எனக்கென்னமோ இட்லி வடை தான் இதை செய்திருப்பார் என்று தோன்றுகிறது.


அடுத்தபடியாக ஸ்குரு, நட்டு, போல்டு, குண்டுசி, ஆணி போன்ற வற்றை போட்டால் இன்னும் கொஞ்சம் வியாபாரம் ஆகலாம்.