அட நம்ம ஆளுங்கள் பெண்களுக்கான 50 சதவீதம் இட ஒதுக்கீடு தரக்கூடிய மசோதாவை விரைவில் நிறைவேற்றப் போகிறராங்களாம். என்னைக் கேட்டால் ஆண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீடு வழங்க யார் முன்வருவார்களோ அவர்களுக்கு என் குடும்பத்தில் உள்ள 59 ஓட்டுகளும்.
எதற்கு 50 சதவீத இடஒதுக்கீடாம்.
எதற்கு 50 சதவீத இடஒதுக்கீடாம்.
நம்ம குடியரசுத் தலைவர் ஒரு பெண் தான்.
சபாநாயகர் யாரு பெண் தான்.
ரயில்வே அமைச்சரும் பெண் தான். இவ்வளவு ஏன்?
குடியரசுத் தலைவர் மற்றும் சபாநாயகரை கொண்டு வந்த நம்ம சோனியா அம்மையாரே பெண்தானுங்களே.
இப்படி பெண் இன்றி அமையாது என்ற மரைக்காயரின் குரலுக்கு ஏற்ப ஐக்கிய தனதா தள தலைவர் சரத்யாதவ் மட்டும் தான் இந்த மாபாதக செயலை கண்டித்து தன்னுயிரை கூட துச்சமாக மதித்து விஷம் அருந்தி தற்கொலை செய்து கொள்வேன் என்று உருக்கமாக (!) கூறியுள்ளதை நான் வரவேற்கிறேன். ப்ளிஸ் சொன்னதை செய்யுங்கள் சார்.