தமிழ் திரையுலகத்தின் மெகா சூப்பர் ஸ்டார் ஆர்.கே. ரித்திஸ் இராமநாதபுரம் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுகிறார்.
கானல் நீர் என்ற திரைபடத்தினை தயாரித்து அதில் தானே நடித்து, பின்னர் அதனை தானே வெளியிட்டு மக்கள் பார்வையிடுவதற்காக ரூ100 பணமும், பிரியாணி பொட்டலமும் கொடுத்து பார்க்கச் சொன்னாலும் ஒரு பயளும் தியேட்டர் பக்கம் வரவில்லை.
இன்று இராமநாதபுரத்தில் போட்டியிடுவதால் ஒரு ஓட்டுக்கு பல பிரியாணி பொட்டலமும், ரூ.1,000மும் கிடைப்பது உறுதி. ஆனால் ஓட்டு போடுவார்களா என்றால் அது நிச்சயமில்லை.
இராநாதபுரம் மட்டும் இல்லாமல் இன்னும் இரண்டு தொகுதியையும் சேர்த்து தேர்தல் செலவு செய்வதாகவும் அறிவித்துள்ளார் ரித்திஸ். தமிழச்சி தங்க
பாண்டியனுக்கு கிடைக்காத இராமநாதபுரம் ரித்திஷ்க்கு கிடைத்திருக்கிறது.
முக்குல சமுதாயத்தைச் சோந்த ரித்திஷ்க்கு பாரதிய ஜனதாவைச் சேர்ந்த திருநாவுக்கரசு தன் பங்கிற்கு முக்குலத்தோர் ஓட்டினை பிரிக்கும் வாய்ப்பு
பெருமளவு உள்ளது.
தலைவனின் நிலா நிலா ஓடி வா கீழே