Monday, April 27, 2009

மயிலாடுதுறை நாடாளுமன்றம் தேர்தல் முன்னேறுகிறார் பேராசிரியர்






தஞ்சை டெல்டா மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருக்கும் மயிலாடுதுறை வன்னியர், த­த், முஸ்­ம் இன மக்கள் அதிகமாக வாழும் பகுதி ஆகும். மற்ற இன மக்களும் ஓரளவு செறிவாக இருக்கின்றனர். தொடர்ந்து 2 முறை காங்கிரஸின் மணி சங்கர் அய்யர் வென்ற தொகுதி இது. கடந்த பாராளுமன்ற தேர்த­ல் தான் வெற்றி பெற தமுமுகவே காரணம் என மணி சங்கரே பேட்டியின் போது கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது மயிலாடுதுறையில் ம.ம.க வேட்பாளராக களமிறங்கி இருக்கும் தமுமுக தலைவர் பேரா. எம்.ஹெச். ஜவாஹிருல்லாஹ்க்கு தொகுதியின் அனைத்து மக்களின் ஆதரவும், உற்சாக வரவேற்பும் கிடைத்துள்ளது. படித்தவர், பொது வாழ்வில் நேர்மையும் ஒழுக்கமும் உள்ளவர். எந்த சர்ச்சையிலும் சிக்காதவர் என்ற இமேஜோடு சிறுபான்மை மக்களின் முழு ஆதரவை பெற்றுள்ளார். பேராசிரியர். தொகுதி முழுக்க உள்ள ஜமாஅத்துக்களை சந்தித்து ஆதரவு திரட்டி வரும் பேராசிரியருக்கு அனைத்து ஜமாஅத்துகளும் ஆதரவு அளித்துள்ளன.

 மேலும், தொகுதியில் வலுவான வாக்கு வங்கியாக இருக்கும் த­த்களின் ஆதரவும் பேராசிரியருக்கு உள்ளது. த­த் அமைப்புகள், மீனவர் அமைப்புகள் பேராசிரியருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. அதே போல்  கிறிஸ்தவர்களின் ஆதரவும் தமுமுகவின் பணிகளால் கவரப் பட்ட நடுநிலை வாக்காளர்களின் ஆதரவும் மனிதநேய மக்கள் கட்சிக்கு உள்ளதால் பேராசிரியர் களத்தில் முன்னணியில் இருக்கிறார்.

எதிர் அணிகளைப் பொறுத்தவரை, தொகுதியில் இரண்டு முறை எம்.பியாக இருந்தும் மணி சங்கர் அய்யர் தொகுதிக்கு எதுவுமே செய்யவில்லை என்ற அதிருப்தி மக்களிடம் பரவலாக உள்ளது. மேலும் வேட்பாளர் அறிவிப்புக்கு முன்பே காங்கிரஸ் கட்சியினர் மணி சங்கர் அய்யரை வேட்பாளராக அறிவிக்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் மே­ட உதவியால் திரும்பவும் சீட்டைப் பெற்ற அய்யருக்கு காங்கிரஸிலேயே பலத்த எதிர்ப்பு. திமுகவினரை வைத்துதான் காங்கிரஸுக்கு பணப்பட்டுவாடா நடக்கிறதாம். காங்கிரஸ்க்கு எதிராக தமிழ் ஆதரவு அமைப்புகளும் களமிறங்கி உள்ளன. இவர்கள் அதிமுகவையும் ஆதரிக்காததால் ம.ம.கவுக்கு அந்த ஓட்டுக்கு கிடைக்க வாய்ப்புகள் உண்டு. அ.தி.மு.க வேட்பாளர் ஓ.எஸ். மணியனை பொறுத்தவரை தொகுதிக்கு நன்கு அறிமுகம் என்றாலும் ராஜ்ய சபா எம்.பியாக இருந்தபோதும் தொகுதிக்கு எதுவும் செய்யவில்லை என்பதோடு, தொகுதியில் பெருமளவில் வசிக்கும் வன்னியர்கள் தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை வேட்பாளராக அறிவிக்காததால் கோபத்தில் உள்ளனர். அதனால் தேவரினத்தை சேர்ந்தவரான மணியன் பா.ம.க உதவியைத்தான் நாட வேண்டியுள்ளது.

தற்போது மயிலாடுதுறை தேர்தல் களத்தில் மனிதநேய மக்கள் கட்சிக்கும், அதிமுகவுக்கும் தான் பலத்த போட்டி நிலவுகிறது. சமீபத்தில் 100க்கும் மேற்பட்ட என்.ஜி.ஓ அமைப்புகள் மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பட்டீஸ்வரம் தியாகிகள் சங்கம், மீனவர்கள் சங்கம், ம.ம.கவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. பேராசிரியருக்கு தொகுதியில் வலுவான வாக்கு வங்கிகளான முஸ்­ம்கள், த­த் மக்களும் இணைந்தாலே வெற்றி என்ற சூழ்நிலையில் நடுநிலை வாக்குகளை பெற்று விட்டால் பேராசிரியர் வெற்றி பெறுவது உறுதி. அதற்கான முயற்சியில் 90 சதவீதத்தை பேராசிரியர் அடைந்து விட்டார் என்றே கள நிலவரம் சொல்கிறது.