Friday, May 1, 2009

இட்லிவடைக்கு மரைக்காயர் பதில்



பிரபல வலைப்பதிவாளர் இட்லி வடை தனது பதிவில் இராமநாதபுரம் நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவைச் சேர்ந்த திருநாவுக்கரசர் தான் வெற்றி பெறுவார் என்று சூசகமாக எழுதியுள்ளார்.

மேலும் ராமேஸ்வரத்தில் ஏதொ ஆட்டோ ஓட்டுநர்கள் பேசியை வைத்து மட்டுமெ ஒரு தொகுதியை கணக்கில் வைத்து பேசுவது என்பது முட்டாள் தனம் (அநேகமாக அந்த ஆட்டோ ஓட்டுநர்கள் ரித்திஷ் திரைப்படங்களின் ஸ்டிக்கர்களை தங்களின் ஆட்டோகளில் ஓட்டி பாதிக்கப் பட்டவர்கள் என்று நினைக்கிறேன்.

மேலும் திருநாவுக்கரசருக்கு வேற வேலை ஏதுவும் இல்லாததால் ஊரில் நடக்க கூடிய காது குத்தில் இருந்து, பூப் புனித நீராட்டு விழா என்று அனைத்திலும் கலந்து கொண்டிருக்கலாம்.

இராமநாதபுரம் முஸ்லிம் மக்களும் முக்குலத்தோர் மக்களும் அதிகம் வசிக்கும் மாவட்டம் ஆகும். தலித் மக்களும் பரவலாக உண்டு.


மேலும் பாஜக வேட்பாளரை பற்றி இவ்வளவு அக்கறை கொண்ட இட்லி வடையார். மனிதநேய மக்கள் கட்சியின் வேட்பாளர் சலிமுல்லாஹ் கான் என்பவர் போட்டியிடுவதையே மறந்து விட்டார்.

உண்மையைச் சொல்லப் போனால் இராமநாதபுரத்தில் யார் வெற்றி பெறுவார் என்பது என்னைப் பொறுத்த மட்டிலும் மில்லியன் டாலர் கேள்வியே.