
சிறையிலிருந்து விடுதலையான இயக்குனர் சீமான், கடந்த மே 2 ம் தேதியன்று நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் கலந்
து கொண்டார்.சிறை மீண்டபின் சீமான், ஈழம் குறித்த தனது கருத்தை விரிவாகப் பதிவு செய்த முதல் மேடை அது.அவரது வீர உரையின் சாராம்சம் வருமாறு :"

நான் அதிகமாக உணர்ச்சி வசப்படுவதாக சொல்கிறார்கள்.உணர்ச்சி இருக்கு, வசப்படுகிறேன். பிரபாகரனும், புலிகளும் அழிந்தால் ஈழப் போராட்டம் என்னாகும்னு ஒரு இளம் பத்திரிக்கை நிருபர் என்னிடம் கேட்டார். யார் புலி? ஈழத்தின் என்னுடைய தாய், என்னுடைய சகோதரன், என்னுடைய சகோதரி, குழந்தைகள் அநியாயமாக கொல்லப்படுகிறார்களே...என்று உணர்ச்சிகொள்கிற ஒவ்வொருவனும் புலிதான்! கிளிநொச்சியில் ஒரு தமிழ் ஈழக்கொடியை இறக்கினான்...உலகம் முழுவதும் ஓராயிரம் ஈழ தேசியக்கொடி உயர்ந்தது.புலிகள் எங்கிருக்கிறார்கள் என்பது இப்போது புரிந்தது.
இறையாண்மை, தேசிய பாதுகாப்பு சட்டம்னு புதுபுதுசா சொல்றாங்க.எனக்கு இறைவனும் கிடையாது, அதனால இறையாண்மையும் கிடையாது.என்னை ஏன் கைது பண்ணினாங்க? நான் பிரபாகரனை என் சொந்த அண்ணன்னு சொன்னேனாம். நான் கேட்கிறேன்... எங்கோ இத்தாலியில் பிறந்த ஒருவர் இந்தியாவுக்கே அன்னையாக இருக்கும்போது என் ரத்தம் என் சொந்த ரத்தம் எனக்கு அண்ணனாக இருக்கக் கூடாதா?இலங்கை வேறொரு நாடு, அங்குள்ள பிரச்சனையில் தலையிட முடியாதுன்னு சொல்றியே... இதை முதல்ல ராஜீவ் காந்தியிடம் சொல்லியிருக்க வேண்டும். இலங்கைக்கு முதலில் அமைதிப்படையை அனுப்பியதே அவர்தானே! பாகிஸ்தானைப் பிரித்து பங்களாதேஷுக்கு சுதந்திரம் வாங்கிக் கொடுத்தது யார்? பங்காளாதேஷை மீண்டும் பாகிஸ்தானுடன் ஒன்றிணைக்க முடியுமா... அப்படி இணைத்தால் நாங்களும் தமிழ் ஈழம் கேட்பதை நிறுத்திக் கொள்கிறோம்.ஈழத்தில் கந்தக நெருப்பில் தமிழன் சாவதற்கு அனைத்து உதவிகளையும் செய்கிறது காங்கிரஸ் கட்சி. முத்துக்குமார் யாரு... பாரதிராஜா யாரு என்றா கேட்கிற...? யார்னு காட்டுறோம். நான் செத்தாவது உங்களை (காங்கிரஸை) தோற்கடிப்பேன். அருமை தமிழனமே... இதுவரை சாதிக்காக ஓட்டு போட்டோம், மதத்துக்காக ஓட்டு போட்டோம், கட்சிக்காக ஓட்டு போட்டோம். இந்த ஒரேயொரு முறை தமிழனுக்காக ஓட்டுப் போடுவோம்.காங்கிரஸை தோற்கடிப்போம். தமிழன் தன்மானத்தை இழக்கவில்லை என்பதை காங்கிரசுக்கு புரிய வைப்போம்! "