Sunday, May 17, 2009

பி.ஜே.பி தோல்வி ஏன் ஆதாரங்களுடன் சுப்பிரமணிய சுவாமி (நகைச்சுவை)



அரசியல் சாணக்கியர், டீ பார்ட்டிகளின் மூலம் அரசாங்கத்தை கவிழ்தியவர், முருகன் இட்லி கடையின் பூட்டை உடைத்தவர், அழகிரிக்கு முன்பே மதுரையில் ஜெயித்தவர், அமெரிக்க உளவுத் துறையின் தோழர் என பல சாதனைகளுக்கு சொந்தக்காரரான ஜனதா கட்சியின் தலைவர் சுப்பிரமணிய சுவாமி மரைக்காயருக்கு அளித்த பிரத்யேக பேட்டி (நகைச்சுவை கற்பனை)



மரைக்காயர்: பி.ஜே.பி தோற்கும் என நினைத்தீர்களா?



சுவாமி: இதோ பாருங்கோ, நான் அன்னைக்கே அத்வானி ஜியிடம் சொன்னேன். காங்கிரஸ் வெற்றிக்கு பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ-தான் காரணம். இதற்கான ஆதாரங்களை நான் அண்டார்டிக்கா கண்டத்தில் இருந்து கொண்டு வந்திருக்கிறேன்.



மரைக்காயர்: ஆதாரங்களை வெளியிடுவீங்களா?



சுவாமி: இட்லி வடை இல்லை லக்கி லுக் கேட்டாள் தருவேன்.



மரைக்காயர்: மனிதநேய மக்கள் கட்சி பற்றி?



சுவாமி: அவாள் தோற்றதுக்கு காரணம் என்னவென்றால். நம்ம பி.ஜே தான் காரணம். நேக்கு தெரியும் அவள்ட்ட 50 லட்சம் ஓட்டு இருக்கு தெரியுமோ. அடுத்த தேர்தல் வரும் போது நீங்கள் வேண்டுமானால் பாருங்கோ பி.ஜே-பி.ஜே.பி கூட்டணி தான் ஜெயிக்கும் பாருங்கள்.

மரைக்காயர்: சிவகங்கையில்ல சிதம்பரம்?



சுவாமி: சிதம்பரம் சில்லறையை கொடுத்து ஜெயித்துட்டார். நான் மொஸார்டுட்ட இருந்து இதற்கான சார்ட்டிலைட் படங்களை வாங்கி வைத்து இருக்கிறேன்.



மரைக்காயர்: ஹை கோர்ட் பக்கம் வருவேளா?


சுவாமி : இதோ பாருங்கோ. இந்த வக்கில் எல்லாமே பிட் அடித்து பாஸ் ஆனவா. அதனாலே நான் இனிமே வரமாட்டேன்.