Thursday, January 13, 2011

எலந்தகுடியிலும் விடுதலை சிறுத்தைகளின் அராஜகம்

ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் விழிப்புணர்வுக்காக முஸ்லிம் சமுதாயம் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

ஆனால் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்கள் அரசியல் அரங்கில் மேன்மை பெறவேண்டும் என லட்சியத்துடன் செயல் பட்டுவரும் அனைவருக்கும் அதிர்ச்சி ஏற்படும் வண்ணம் தமிழகத்தில் பல இடங்களில் விரும்பத்தகாத நிகழ்வுகள் நடந்து வருகின்றன். கடந்த பதிவில் இதுகுறித்து ஓர் செய்தி வெளியிடப்பட்டது. இப்போது நாகை மாவட்டம் மயிலாடுதுறை வட்டம் எலந்தகுடி கிராமத்தில் விடுதலை சிறுத்தை கட்சியினர் தொடர்ந்து அராஜகம்செய்து வரும் தகவல்கள் நாடெங்கும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.

விடுதலை சிறுத்தை அமைப்பினர் திட்டமிட்டு எலந்தகுடி கிராமத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தி வருகின்றனர்.

வெளியூரில் இருந்து திருமணத்திற்காக வந்த முஸ்லிம்களை வேண்டுமென்றே விடுதலை சிறுத்தை கட்சியினர் வம்புக்கிழுத்து தாக்குதல் தொடுத்துள்ளனர். விருந்தாளிகளாக வந்த வெளியூர் முஸ்லிம்களை தாக்கியதை தட்டிக் கேட்ட எலந்தகுடி முஸ்லிம் மக்களை ஆட்டோ ஓட்டுனர்கள் என்ற போர்வையில் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

பள்ளிவாசலுக்குச் சொந்தமான குளமான மவ்லா குட்டைகுளத்தில் இறங்கி சட்ட விரோதமாக மீன் பிடிக்கவும் முயன்று வருகின் றனர்.

எலந்தகுடி ஹாஜியார் தெருவில் அந்த அமைப்பின் ரவுடிகள் புகுந்து சகாபுதீன், சபீக் அகமது என்ற இரண்டு இளைஞர்களையும் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.
ஜின்னாதெருவில் நள்ளிரவு நேரத்தில் பயங்கர ஆயுதங்களுடன் முஸ்லிம் இளைஞர்களை கொடூரமாகத் தாக்கி வருவதும் தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து காவல்துறையினரிடம் புகார் தெரிவித்தால் கூட காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுப்பதில்லை. அத்தோடு புகார் அளித்தவரை யும் தாக்குதலுக்கு ஆளானவர்களையும் பொய் வழக்கு போட்டு காவல்துறையினர் கொடுமை படுத்தும் போக்கும் தொடர்தாக அவ்வூர் மக்கள் குமுறுகின்றனர்.

நள்ளிரவு நேரத்தில் காரணம் எதுவுமின்றி குறிப்பிட்ட அமைப்பை சேர்ந்தவர்கள் இரு சக்கர வாகனத்தில் கூச்சலிட்டுக்கொண்டு முஸ்லிம்கள் வசிக்கும் தெருக்களில் சுற்றுவது தேவையற்ற பதட்ட நிலையை அதிகரித்துள்ளது.

பள்ளிவாசல் தெரு மதகுகளில் அமர்ந்து கொண்டு முஸ்லிம் பெண்களை கிண்டல் செய்து பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக் கியுள்ளனர்.
எலந்தகுடி பகுதிக்கு அருகில் உள்ள அரிவலம் பகுதியைச் சேர்ந்த விடுதலை சிறுத்தைகள் இதுபோன்ற அராஜகங்கள் விளைவித்து சமூக ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் வேலையைத் தொடர்ந்து செய்து வருகின்றனர் என்பது அப்பகுதி மக்களின் குமுறலாகும்.

அப்பகுதி முஸ்லிம்கள் சமூக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் முன்னுரிமை கொடுக்கும் சமாதானப் பிரியர்கள் என்பதாலே அப்பகுதி அமைதிப் பூங்காவாக உள்ளது.

இதனை காவல்துறையும் மாவட்ட நிர்வாகமும் உடனடியாக கவனத்தில் எடுத்துக்கொள்ளாவிடில் அந்தப்பகுதி பதட்டப் பிரதேசமாகும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக நட வடிக்கை எடுத்து எலந்தகுடி முஸ்லிம் மக்களின் சமாதானசக வாழ்வுக்கு உத்திரவாதம் தர அரசாங்கம் முன் வரவேண்டும்.

இப்பிரச்சனை தொடர்பாக பள்ளி வாசல் நிர்வாகம், தமிழக முதல்வர் தொடங்கி அனைத்து முக்கிய துறை யினருக்கும் முறையீடு செய்தும் நடவடிக்கை துரிதமாக்கப்படவில்லை. பற்றி எரியும் இப்பிரச்சனையை உடனடியாக கவனிக்காமல் தாமதப்படுத்தும் மாநில காவல்துறை செயல் நிச்சயம் கண்டிக்கக்கூடியது.

தலித்துகளின் உற்ற நண்பர்களான முஸ்லிம்களோடு மோதும் விடுதலை சிறுத்தைகள் தங்கள் பழைய நாட்களை எண்ணிப் பார்க்க வேண்டும். தங்கள் வளர்ச்சிக்கு துணையாக இருந்தவர்களை பகைப்பது நியாயம் தானா?